Thursday 2nd of May 2024 04:50:43 AM GMT

LANGUAGE - TAMIL
.
சசிகலா ரவிராஜிற்கு நீதி கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்!

சசிகலா ரவிராஜிற்கு நீதி கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்!


விருப்பு வாக்கு விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்ட சசிகலா ரவிராஜிற்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர் போராட்டமாக மாற்றமடைந்துள்ளது.

மாமனிதர் ரவிராஜின் குடும்ப உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள ரவிராஜ் அவர்களது உருவச்சிலைக்கு முன்பாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த அமைதி வழிப் போராட்டம் மதியம் 2.00 மணியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்று முன்னதாக அதே இடத்தில் சசிகலா ரவிராஜிற்கு நீதி கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை அவரது ஆதரவாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.

நடந்தேறிய சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சசிசலா ரவிராஜ் அவர்களை பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் தொடர்டந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருவதுடன் அரசியல்-கட்சி வேறுபாடுகள் கடந்து நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக கூறிவருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விவகாரம் குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களை அவரது வீட்டிற்கு சென்று இன்று மாலை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவித்திருந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஆதரவு போராட்டம் தற்போது மீண்டும் தொடர் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், தென்மராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE